இஸ்லாமிய நாட்காட்டி – 1443

உண்மைகளை விளங்கிக் கொள்ளல், உண்மைகளை அடைந்து கொள்ளல் ஆகிய இரண்டுக்குமிடையிலான வேறுபாடு மிகப் பெரியது. முதல் வகை அறிவு. இரண்டாவது வகை ஞானம்.
முதலாவதில் வார்த்தைகளோடும் வெறும் பொருள்களோடும் அல்லது அனுபவங்களோடும் துண்டுதுண்டான பெறுபேறுகளோடுமே உறவாடுகிறோம். இரண்டாவதிலோ உயிர் ததும்பும் விளைவுகளோடும் முழுமையான முடிவுகளோடும் உறவாடுகிறோம்.
விரிந்த ஆன்மாவோடு, தவறையும் பலவீனத்தையும் கண்டு இரங்குகின்ற கனிவோடு அடுத்த மனிதர்களோடு பழகுவதும் அவர்களை கவனிப்பதுமே உண்மையான பெருந்தன்மையாகும். அவர்களை பண்படுத்தி, தூய்மைப்படுத்தி, முடிந்த அளவு நம் கருத்துக்கு உயர்த்துவதற்கான போலியற்ற விருப்பத்தை அதுவே பிரதிபலிக்கிறது. இதன் பொருள் எம் உயர்ந்த பெறுமானங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றிலிருந்து விலகிவிடுவதோ, அல்லது அடுத்த மனிதர்களோடு முகஸ்துதி பாராட்டி அவர்களது துர்க்குணங்களை புகழ்வதோ, அல்லது அவர்களை விட நாம் உயர்ந்து நிற்பவர்கள் என்று உணரச்செய்வதோ அன்று.
“இப்போது மக்காவிலிருந்து திரும்பிவிட்ட நிலையில், கஅபாவை எண்ணி ஏங்குகின்ற நிலையில், உம்முடைய ‘சுயத்தை’ அங்கேயே புதைத்துவிட்டு வந்தீரா? அங்கேயே திரும்பிப் போய்விட வேண்டுமென்ற ஆவல் மீறுகிறதா?” என்று கேட்டேன்.
“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது? ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா?…
இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களைத் துடைத்தழித்து, கான்கிரீட்-கண்ணாடி டவர்களை அவற்றுக்குப் பதிலாக நிர்மாணிக்கின்றனர். அந்த டவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமைச் சூழ்ந்தமைந்திருப்பது மட்டுமின்றி, அதன் தோற்றத்தை குள்ளமாக்கி விடுகிறது, மற்றும், அதன் ஆன்மிகச் சூழலின் சுகந்தத்தைக் கெடுத்துவிடுகிறது.
நமது திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாதவொரு நாட்காட்டியை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதே போல், வருங்காலத்திற்காக மூலோபாய ரீதியில் ஆயத்தமாகும் ஒரு இஸ்லாமிய அமைப்பு, போலிக் கடவுளர் வழிபாட்டின் மீதமைந்த ஒரு நாட்காட்டியை அதற்குப் பயன்படுத்துவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
நமது திட்டமிடலுக்குப் பயன்படுத்த முடியாதவொரு நாட்காட்டியை அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பான் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதே போல், வருங்காலத்திற்காக மூலோபாய ரீதியில் ஆயத்தமாகும் ஒரு இஸ்லாமிய அமைப்பு, போலிக் கடவுளர் வழிபாட்டின் மீதமைந்த ஒரு நாட்காட்டியை அதற்குப் பயன்படுத்துவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
இந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. மேற்குலகில் அந்தக் கேள்விக்கு அண்மைக் காலத்தில் ஒருவித போலித்தனமான, சந்தேகத்திற்குரிய சில பதில்கள் தரப்பட்டுள்ளன. மட்டுமின்றி, சூஃபியிசம் குறித்த ஆர்வமும் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு நம்பத்தகுந்த அறிமுக நூலின் தேவை மென்மேலும் அதிகரித்துள்ளது. அத்தகு அறிமுக நூலின் தேவையை இந்த நூல் பூர்த்தி செய்கிறது.