ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்

Posted on

மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன். என்னால் செய்யமுடிந்த அளவுக்கு செய்திருக்கிறேன். ஆயுள் நீடித்தால் நான் செய்ய ஆசைப்படுகின்ற பல விடயங்கள் உண்டு. அவை முடியாமற் போனாலும் கவலை என் உள்ளத்தை அரிக்கப் போவதில்லை. அடுத்தவர்கள் நிச்சயமாய் அவற்றை செய்வார்கள். நிலைத்து நிற்கத் தகுதிபெற்றிருந்தால், என்றுமே அவற்றுக்கு மரணமில்லை. இப்பிரபஞ்சத்தை அவதானித்துக் கொண்டிருக்கும் அந்த தெய்வீகக் கண்காணிப்பு, ஒரு நல்ல சிந்தனையை சாகவிடாது என்ற திருப்தி எனக்கிருக்கிறது.